சிறுமியை தாக்கிய காட்டு பன்றிகள்! மக்கள் அச்சம்!!

சிறுமியை தாக்கிய காட்டு பன்றிகள்! மக்கள் அச்சம்!!

  கே.கண்ணன்,

  கட்டுபன்றிகளின் தாக்குதலினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ளது லாலாபுரம் கிராமம். இந்த ஊரில் பழனிவேல் - ஸ்ரீதேவி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அவருடைய மகள் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ரதி பூ பறித்துக் கொண்டிருந்தார்.

  பின்னர் அவர்களாது ஆட்டுக்குட்டிக்கு மாணவி ரதி இரை வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த தோட்டத்திற்குள் எதிர்பாராத விதமாக வந்த காட்டுப்பன்றிகள் திடீரென பாய்ந்து சிறுமியையை தாக்கியதில் இடுப்பு, கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்தபோது காட்டுப்பன்றிகளிடம் மாணவி சிக்கி இருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் துரிதமாக செயல்பட்டு பன்றிகளிடம் இருந்து அவளை மீட்டனர்.

 அதனையடுத்து அந்த மாணவியை வில்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

   சிறுமிக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு பன்றிகளிடம் சிறுமி சிக்கி படுகாயம் அடைந்த விவகாரம் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.