தனியார் நிறுவனங்களில் வருமானவரி சோதனை!

தனியார் நிறுவனங்களில் வருமானவரி சோதனை!

 ஜி.கே.சேகரன்,

  சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

  அதே போல் வெளி மாநிலங்களில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  சென்னை அசோகா குரூப் மற்றும்  வேலூரில் அம்பாலால் ரியல் எஸ்டேட் அம்பாலால் எலெக்ட் ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சோதிக்கிறார்கள்.

  சென்னையில் மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 இதற்காக போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.