நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்!

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்!

கு.அசோக்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 17ஆவது வார்டு 150 மேற்பட்ட பொதுமக்கள் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 17 ஆவது வார்டு பகுதியில் கழிவுநீர் செல்ல  கால்வாய் முறையான வசதி இல்லாத காரணத்தினால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

 கால்வாயில் கழிவுநீர் நீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.

  நிரந்தரமாக கழிவுநீர் கால்வாய் அமைக்க  வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மக்கள் சோளிங்கர் பரவத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்த நகராட்சி ஆணையர் பரந்தாமன் நகராட்சி துணைத் தலைவர் பழனி உதவி  காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.