நாய்கள் சித்ரவதையும்-பராமரிப்பும்- உலக வெறிநோய் தடுப்பு தினமாம்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

 உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களை சித்ரவதையும் நிலழ்வு வேலூரிலும்,-பராமரிப்பு நிகழ்வு திண்டுக்கல் மாவட்டத்திலும் நடந்தது.

 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கால்நடை மருந்தகம் வேலம்பட்டியில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு நத்தம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

   இதில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம்,தோல் வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் உதவியாளர் செந்தில்குமார், ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

   சிறுகுடியில் உதவி மருத்துவர் குமரேசன் தலைமையில், ஊராட்சி தலைவர் கோகிலாவாணி வீரராகவன் முன்னிலையில் பராமரிப்பு உதவியாளர் பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு சிகிச்சை அளித்தனர். இதேபோல் குட்டுப்பட்டி,செந்துறை, கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இம்முகாம் நடைபெற்றது.

வேலூரில் நாய் சித்ரவதை.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், வீதியில் அமைதியாக சென்று வந்துக் கொண்டிருந்த நாயை மாநகராட்சி ஊழியர்கள் சித்ரவதை செய்து அதை பிடித்து இழுத்துச் சென்றனர்.

  இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் இதுவரையில் அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை.