கள்ளச்சாராயம் வீடியோ! குடியாத்தம் சப்டிவிஷன் பரபரப்பு! நால்வர் கைது!
Ma.ba.Gajaraj,
குடியாத்தம் சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் சுதந்திரமாக காய்ச்சப்படுவதுடன், அவை பப்ளிக்காக விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்ராவரம், எர்த்தாங்கள், தட்டப்பாறை காளியம்மன் பட்டி, கன்னிகாபுரம் ஏரிக்கரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்று வருகின்றனர்.
இந்த கள்ளச்சாரம் பேர்னாம்பட்டு மலை பகுதிகளிலிருந்து காய்ச்சி வர்தகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறதாம், இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் சம்மந்தப்பட்ட டி.எஸ்.பி, மற்றும் மதுவிலக்கு போலிசார் அதைப்பற்றி காதில் போட்டுக் கொள்ளவில்லையாம்.
ஆகவே இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் காவல் துறை உயரதிகாரிகள் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும் என்று இளைஞர்கள் சொன்னார்கள்.
சொன்னதோடுமட்டுமல்லாமல் அனுப்பியும் வைத்தனர்.
அதன் பின்னர் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என நான்கு சாராய விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அப்டியே சாராயம் தயாரிப்பாளர்களையும், அவர்களுக்கு துணை போகும் காவல் துணையினர் மீதும் நடவடிக்கை எடுத்தால் நலம் என மக்கள் சொல்கிறார்கள்.