மாநகராட்சி களேபரம்:- வேடிக்கை பார்த்த தெற்கு காவல் நிலையத்தார்!

மாநகராட்சி களேபரம்:- வேடிக்கை பார்த்த தெற்கு காவல் நிலையத்தார்!

கு.அசோக்,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து பாஜகவினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

 மாநகராட்சியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்தை தெற்கு காவல் நிலையத்தார் கட்டுபடுத்தாமல் வேடிக்கை பார்த்ததால் அங்கு களேபரம் ஏற்பட்டது. அதை எஸ்.பி.அவர்கள் நேரில் தலையிட்டு நிலைமையை கட்டுபடுத்தினார்.

  வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில்  ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி  300 க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

 அந்த வகையில் அனைத்து வார்டுகளிலும், கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாளா சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

   அந்த பணிகள் மிக மிக மோசமாக நடந்து வருவதாக கூறி ,வேலூர் மாநகராட்சியை கண்டித்து இன்று பாஜகவினர் வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.

  அவர்களை தடுக்கும் விதமாக அங்கு போலிசாரை நிறுத்திவைத்திருந்த தெற்கு காவல் நிலையத்தாரால்,  போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இயலவில்லை.

  இதனால் பா.ஜ.க.கொடியை ஏந்தியவாறு மாநகராட்சி அலுவலகத்துக்குள் போராட்டங்காரர்கள் நுழைந்து களேபரம் செய்தனர்.

  சட்ட ஒழுங்கு பிரச்சினை வந்துவிடாக் கூடாது என்பதற்காக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணா, இ.கா.ப. அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.