அரை நிர்வாணம்.....சரக்கு....ரோட்டில் கலாட்டா! போலீஸ் பணி இடைநீக்கம்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
அரை நிர்வாணம்.....சரக்கு.....நடுரோட்டில் கலாட்டா செய்து பந்தா காட்டிய போலிஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது பற்றின விவரம் வருமாறு,
கரூர் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 27). இவர் சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
நேற்றைய தினத்துக்கு முன் தினம் மாலை தனது காரில் கரூர்-திண்டுக்கல் சாலையில் சென்ற போலிஸ்காரர் லோகநாதன் தாந்தோணிமலை அருகே ஆம்புலன்ஸ் ஒன்றின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
இவரது காரை பின்தொடர்ந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே லோகநாதனின் காரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது லோகநாதன் ஃபுல் மப்பில் இருந்ததால், மேலாடையை கழற்றிவிட்டு அரை நிர்வாணத்துடன் போதையில் தகராறு செய்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லோகநாதனை பிடிக்க முயன்றனர்.
அப்போது லோகு பொதுமக்களையும், போலீசாரையும் ஆபாசமாக திட்டி, தாக்கினார்.
இந்த சம்பவங்கள் அடங்கிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதையடுத்து, போலிஸ்காரர் லோகநாதன் மீது தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், போலீஸ்காரர் லோகநாதனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதே போல் தான் நேற்று ஒரு சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நடந்தது.
அந்த சம்பவத்தில் வாகன ஓட்டி ஒருவரை, ஆலங்காயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி என்பவர் பலர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார்.
இதனால் கோபமடைந்த வாகன ஓட்டி மணிகண்டன் சிறப்பு உதவி ஆய்வாளரை பதிலுக்கு கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் மணிகண்டன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மணிகண்டனை அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளா மீது வழக்கு பதிவுசெய்யவில்லை. உமாபதி திருப்பத்தூர் ஆயதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அது சரி,