மந்திரியை மதிக்காத தெனாவட்டு வேந்தர்!

G.K.Sekaran,
திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தரின் பணி பதவி காலம் முடிவடைவதால் அவர் அவசர அவசரமாக கெஸ்ட் ஹவுஸ் திறந்து வைத்தார். மந்திரியைக்கூட அழைக்கவில்லை என்பதால் பலர் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம்,காட்பாடி சேர்க்காட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பலக்லை கழக வளாகம் உருவாவதற்கு சாட்சாத் அமைச்சர் துரைமுருகன் தான் முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.
அப்படிப்பட்ட இந்த பல்கலையில் துணைவேந்தராக தாமரை செல்வி உள்ளார் இவரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் சிலை திறக்கப்பட்டது அதில் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்டோரையும் ஆட்சிமன்ற குழுவையும் இவர் அழைக்காமல் இவரே சிலையை திறந்து கொண்டார்.
அதே போல் இன்றும் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் தாமரை செல்வியின் பதவிகாலம் நாளையுடன் முடிவடைவதால் இன்று திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் கெஸ்ட் ஹவுசை அவரே தன்னிச்சையாக விழாவை நடத்தி அமைச்சர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட யாரையும் விழாவுக்கு அழைக்காமல் திறந்து வைத்தார்.
ஆனால் இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவமாணவிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது இதே துணைவேந்தரை அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தற்போது துரைமுருகன் மந்திரியாக உள்ள நிலையில் அவர் பெருந்தன்மையாக செயல்பட்டுவருகிறார். இந்த நேரத்தில் அந்தம்மா தெனாவட்டாக செயல்பட்டுள்ளாரே என்று மக்கள் வேதனை பட்டனர்.