20 டன் மீன்கள் ஏரியில் செத்து மிதப்பதால் அச்சம்! இராசயானம் கலப்பா?

கு.அசோக்,
அரக்கோணம் நகரில் உள்ள ஏரியில் 20 டன் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட 6 ஆவது வார்டில் உள்ள ஏரியில் சுமார் 20 டன் மதிப்பிலான ஏரி மீன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பார்த்து அதிர்ந்தனர்.
மேலும் இதனால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டனர்.
மீன்கள் இறக்க என்ன காரணம்? யாராவது தண்ணீர் நஞ்சை கலந்தனரா? அல்லது நீர் மாசுகாரணமாக மீன்கள் இறந்தது எனபது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நோய் பரவாமல் இருக்க தண்ணீர் பிளிசிங்க் பவுடரை தூவி வருகின்றனர்.
நல்ல ஆபிசர்ஸ்.