சொந்த வீட்டில் 52 பவுன் நகையை லவட்டிய சிறுவன்!

சபரி.ஈஸ்வரன்,
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை பல்கலை நகரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள தங்க நகைகளின் இருப்பை சோதித்துப் பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகள் குறைபாக இருப்பது பற்றி கண்டுபிடித்தார்.
ஆகவே அவர் இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் வேலை பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓட்டல் அதிபர் வீட்டில் 52 பவுன் தங்க நகைகளை குடும்பத்தினர் யாராவது திருடி இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திய போது, ஓட்டல் அதிபரின் 13 வயது மகன் நகைகளை திருடியிருப்பது தெரியவந்தது.
அந்த சிறுவன் அதே பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் இருந்து வந்து உள்ளது.
அதே போல் நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பரமாக செலவு செய்து ஊர் சுற்றி வந்து உள்ளார். ஆனால் ஓட்டல் அதிபர் தனது மகனுக்கு அவ்வலவுபணம் கொடுக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ரடுத்தகட்டமாக 9-ம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் சிறுவன் கூறும்போது, எனக்கு ஆன்லைனில் விளையாட அதிக பணம் தேவைப்பட்டது. ஆகவே என் நண்பனிடம் பணம் கேட்ட போது அவன் கோச்சடையில் அண்ணன் ஒருவரை தெரியும், அவரிடம் நகை கொடுத்தால் பணம் கொடுப்பார் என்று சொன்னான்.
நான் எங்கள் வீட்டில் பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகளைனவ்வப்பொழுது எடுத்து சென்று நண்பனிடம் கொடுத்து, கோச்சடையில் உள்ள ஒருவரிடம் பணம் பெற்று செலவு செய்து வந்தேன் என்று வாக்கு மூலம் அளித்தான்.
அடுத்ததாக போலிசார் இந்த வழக்கில் என்ன செய்ய போகிறார்களோ?