நஷ்ட ஈட்டை கொடுத்துட்டு மத்த வேலையை பார்!

  நஷ்ட ஈட்டை கொடுத்துட்டு மத்த வேலையை பார்!

கு.அசோக்,

  பரதராமி கிராமத்தில் மின் பாதை அமைக்க  கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் மரங்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்பாட்டம்

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பரதராமி கிராமம் அருகே நெடுஞ்சாலை ஓரம் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

   இந்த போராட்டத்தின் போது மின்கம்பம் மின்பாதை செல்லும்  நிலங்கள் பயிர் மரம் கிணறு ஆழ்துளை கிணறு கட்டிடங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியும், உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2.45 சதவீதத்திற்கு பதில் 10 மடங்கு எழுப்பி விடு வழங்க வேண்டும் என வலியுருத்தியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம விவசாயிகள் ஈடுபட்டனர்.