சொத்து தகறாரில் அடித்துக் கொலை!

சொத்து தகறாரில் அடித்துக் கொலை!

 ஜி.கே.சேகரன்,

   இராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோவிந்தாங்கல் பகுதியில் வசித்துவருபவர் முருகேசன் என்பவரின் மகன் ரங்கநாதன்,இவர் சிக்கன்கடை வைத்துள்ளார்.

   இவருக்கும் அதேபகுதியில் வசிக்கும் உறவினர் கிருஷ்ணன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே  கடந்த 15-வருடங்களாக நிலத்தகராரு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

   இந்நிலையில்  நேற்று  காலை மீணடும்  வாய்தகராரு ஏற்ப்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

  இதில் கிருஷ்ணனுக்கு ஆதரவாக அவரது மகன்கள் உமேஷ், அன்பு, மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் ரங்கநாதனை  இரும்பு பைப்பால் தலையில் பலமாக தாக்கினர்.

   இதில் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு ரத்தம் கட்டியுள்ளிய நிலையில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.  இதனிடையே ரங்கநாதனை அவரது  மனைவி கங்கா மகன் சிதம்பரம் ஆகியோர் உடனடியாக சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர்.

   அங்கு பரிசோதித்த மருத்தவர் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

  இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி ரங்கநாதன் உயிரிழந்தார்.

  இச்சம்பவம் குறித்து  தகவல் அறிந்து  பாணாவரம் போலீசார் மோதலில் ஈடுப்பட்ட கிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணன் அவரது மகன்கள் உமேஷ், அன்பு, கிருஷ்ணனின் மனைவி கிருஷ்ணவேவனி ஆகிய 4-பேரை  கைது செய்தனர்.

 

 உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுளளது.