கோடிகளில் லாட்டரி சூதாட்டம் ஜரூர்:- போலிசார் உடந்தை!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டத்தில் லாட்டரி சூதாட்டம் ஜரூராக நடந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள் பல இடங்களில் லாட்டரி அலுவலகங்கள் வைத்துள்ளனர்.
அங்கு லாட்டரி ரிசல்டுக்கு போட்ர்டெல்லாம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயகரன் என்கிற எஸ்.பி.போலிஸ்காரர் ஒருவர் தான் இதற்கெல்லாம் பாடிகார்டாக செயல்படுகிறாராம்.
மேற்படி லாட்டரி பிசினஸை முத்துசாமி என்பவர் நடத்துகிறார். அவரின் தயவால் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தாதாயிஸத்துடன் இந்த பிசினஸை நடத்துகிறார்.
அதே போல் குடியாத்தம் சப்டிவிஷன் பகுதியில் அரசியல்வாதி கோபி-1, கோபி-2, செந்தில், அன்வர் போன்றவர்கள் போலிஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலேயே லாட்டரி பிசினஸ் செய்து வருகிறார்கள்.
இதற்கு சம்மந்தப்பட்ட ஏரியா டிஎஸ்பி நேரடியாக பாதுகாப்பு கொடுத்து வாரி சுருட்டிக் கொண்டிருக்கிறாராம்.
இந்த விவகாரம் குறித்து கொதிக்கும் சில அமைப்புகள் டிஜிபி அவர்களுக்கு மனு அளித்து அதன் பின்னர் லாட்டரி பிசினஸை முற்றிலும் ஒழிக்க உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
இது குறித்து பெயர் கூற விரும்பாத ஒருவர் தெரிவிக்கையில், கள்ளத்தனமாக லாட்டரி பிசினஸ் நடப்பது எங்களுக்கே
தெரியுது, ஆனால் போலிசுக்கு தெரியாதாம். இதனால் பல ஏழை குடும்பங்கள் நடுரோட்டுக்கு வந்துவிட்டது.
இந்த லாட்டரி சூதாட்டத்தில் எப்போதாவது யாருக்கேனும் பரிசு விழுந்தால் அதைக்கூட முழுவதுமாக கொடுப்பதில்லை. கொஞ்சம் பிரஷர் கொடுத்து கேட்டால் டிஎஸ்பி ஆபிசுக்கு சென்று அங்கு பஞ்சாயத்து வைக்கிறார்கள். தவறு என்று தெரிந்தே அதிகாரிகள் லாட்டரி முதலாளிகளுக்கு உதவி செய்கின்றனர். இதனால் குடியாத்தம் மற்றும் வேலூரில் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது என்றார் வேதனையுடன்.
ஆக குப்புசாமி, கோபிக்கள், அன்வர், செந்தில் ஆகியோரை மடக்கிபிடித்து அவர்கள் மீது போலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் ஒழிய ஏழைகள் கள்ள லாட்டரி வியாபாரத்தில் மூழ்கி வீணாகி கொண்டுத்தான் கிடப்பார்கள்.