நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இறக்கவில்லை! ஏஇஎஃப்ஐ குழு உறுதி!

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இறக்கவில்லை! ஏஇஎஃப்ஐ குழு உறுதி!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 நடிகர் விவேக்கின் மரணம் தடுப்பூசியுடன் தொடர்புடையது அல்ல என்று மத்திய அரசின் ஏஇஎஃப்ஐ குழு உறுதி செய்துள்ளது.

  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17, ஆம் தேதி மூத்த தமிழ் நகைச்சுவை நடிகர் இறந்ததைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டதே அதற்கு காரணம் என்று பீதி கிளம்பியது.

  நடிகர் விவேக் கோவிட் -19 தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு  ஏப்ரல் 17 அன்று சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அதிகாலை 4.35 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்புக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும்  தொடர்பில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு கண்டறிந்துள்ளது.

  செப்டம்பர் 14, 2021 தேதியிட்ட ஒரு அறிக்கையில், நோய்த்தடுப்புக்குப் பிறகு தீவிரமான பாதகமான நிகழ்வுகள் பற்றிய தேசியக் குழு (ஏஇஎஃப்ஐ) விவேக்கின் மரணம் தற்செயலானது என்றும் அவர் ஏப்ரல் 15, 2021 அன்று எடுத்த கோவாக்ஸின் தடுப்பூசியுடன் தொடர்புடையது அல்ல என்றும் கூறியுள்ளது.

 59 வயதான விவேக் மரணத்திற்கு மருத்துவக் காரணம் பல இருக்கலாம் என்று கமிட்டி தீர்ப்பளித்துள்ளது:

 குறிப்பாக, 'உயர் இரத்த அழுத்தத்தினால் வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷனுடன் கார்டியோஜெனிக் அதிர்ச்சியுடன் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

 வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் என்பது அசாதாரண இதய துடிப்பைக் குறைக்கிறது, சில சந்தர்ப்பங்களில் அரித்மியா என்றும் அழைக்கப்படுகிறது.

  ஏஇஎஃப்ஐ கமிட்டி நடிகர் விவேக்கின் மரணத்தை 'சி' என வகைப்படுத்தியுள்ளது,    இது தமிழ்நாட்டின் மூத்த சுகாதார அதிகாரியால் இ.சி.ஜி- க்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  தேசிய அளவில், மருத்துவ நிபுணர்கள், இருதயநோய் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், நுரையீரல் மருத்துவ நிபுணர்கள், மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணர்கள் காரண மதிப்பீட்டு துணைக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சிறப்பு குழுவால் செய்யப்பட்ட காரண மதிப்பீட்டின் முடிவுகள் இறுதி ஒப்புதலுக்காக தேசிய ஏஇஎஃப்ஐ குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல சரிபார்ப்புகள் வழியாகச் சென்ற பின்னரே இந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்படுகிறது.

  சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் க்ஷி தடுப்பூசியின் வரையறுக்கப்பட்ட அளவுகளைத் தவிர இந்தியாவில் நிர்வகிக்கப்படும் மூன்று தடுப்பூசிகளில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஒன்றாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாரத் பயோடெக் அதன் செயல்திறன் தரவை வெளியிட்டது, அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் அறிகுறி கோவிட்-19 க்கு எதிராக 77.8% செயல்திறனைக் காட்டியது என்பதைக் சுட்டிக்காட்டுகிறது. கோவக்ஸின் கடுமையான அறிகுறி கோவிட் -19 க்கு எதிராக 93.4% செயல்திறனைக் கொண்டுள்ளது, அறிகுறியற்ற கோவிட் -19 க்கு எதிராக 63.6% பாதுகாப்பு மற்றும் சார்ஸ்-கோவி-2, பி.1.617.2 டெல்டா வகைக்கு எதிராக 65.2% பாதுகாப்பு உள்ளது.