திருடனுக்கு கொட்டிய தேள்! போதை பொருட்கள் பறிமுதல்!!

கு.அசோக்,
நாட்றம்பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல் கடத்தல்காரர் இருவர் படுகாயம் நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது, கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடந்து திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது லட்சுமிபுரம் அருகே திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாட்றம்பள்ளி போலீசார் படுகாயம் அடைந்த பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்த மலே பாய் (வயது 25) அதே பகுதியை சேர்ந்த சரண்சிங் (வயது 25) ஆகியோரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா இருப்பது தெரியவந்தது அதனை தொடர்ந்து காரில் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.