கரெக்ட் டைமுக்கு வாங்க ப்ளீஸ்!
த.நெல்சன்,
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று நல்ல முறையில் செயல்பட்டு வந்தது. இப்பவும் செயல்படுகிறது ஆனால் நல்ல முறையில் இல்லை.
பகுதி இரண்டில் உள்ள இந்த சுகாதார மையமானது காலை 9 மணிக்கு நோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் பணியை துவங்கும்.
ஆனால் சமீப காலமாக அங்குள்ள பணியாளர்கள் காலை ஒன்பது மணிக்கு வருவது கிடையாது.அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வருகிறார்கள்.
இந்த சுகாதார மையத்துக்கு குழந்தை பெறும் தருவாயில் உள்ள பெண்கள் உள்ளிட்ட பலர் ரெகுலர் செக்கப் மற்றும் சிகிச்சைக்காக வந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி வருவோர் சுகாதார மைய ஊழியர்கள் வரவில்லை என்று காத்துக் கொண்டிருந்தனர்.
நல்ல பெயரெடுத்த அந்த மையம் மறுபடியும் பழையபடி சீர்பட இயங்க வேண்டும் அல்லவா? அதற்கு கடைநிலை ஊழியர் முதல் மருத்துவர் வரை, அவர்களுக்கு அரசு குறிப்பிட்ட நேரப்படி பணிக்கு வரலாமே.