போலிசுன்னாலே கெத்துதான் போலிருக்கு!

ம.பா.கெஜராஜ்,
ளரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றும் ஒருவரை போலிஸ்காரர் முகத்தில் குத்தி கிழித்தார். அதற்காக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
போலிஸ்காரர்கள் செய்யும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து செய்தியாகி வருகின்றன. இருந்தாலும் கூட தவறு செய்த போலிசார் மீது சட்ட நடவடிக்கை தவிர்க்கப்பட்டு வருகிறது. அதனால தான் போலிசுன்னாலே கெத்துதான் என்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவத்தை நடத்திய போலிஸ்காரர் இடமாற்ற நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார், அது பற்றின விவரம் வருமாறு:-
சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஜூஸ் கடையில் இன்று காலை ஒரு நபர் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்கும் போது எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது எச்சில் பட்டுவிட்டதாம்.
ஆத்திரமடைந்த காவலர் அந்த நபரை கடுமையாக தாக்கினார்.
இதனால், அந்த நபரின் முகம் கிழிந்து ரத்தம் வழிந்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் காவலரை பிடித்து 100க்கு கால் செய்து சைதாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காயம் பட்ட நபரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் பொதுமக்களே அனுமதித்தனர்.
இது தொடர்பாக தாக்குதலுக்குள்ளான நபர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைதாப்பேட்டை போலீசாரின் விசாரணையில் தாக்குதலுக்குள்ளான நபர் பாலச்சந்திரன் என்பதும் இவர் அயனாவரம் பேருந்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்தது.
பாலச்சந்திரனை கடுமையாக தாக்கிய காவலர் லூயிஸ் என்பதும் இவர் சைதாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேற்படி பாலச்சந்திரன் இன்று காலை சைதாபேட்டையில் சர்ச்சுக்கு வந்துள்ளார். பின்பு அருகிலுள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் குடிக்கும் போது பாலச்சந்திரன் சாலையில் எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் லூயிஸ் மீது எச்சில் பட்டதாகவும் அதனால் எழுந்த வாக்குவாதம் முற்றி பாலச்சந்திரனை காவலர் லூயிஸ் தாக்கியதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கண்டெக்டரை தாக்கிய சைதாப்பேட்டை காவலர் லூயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுதான் அவருக்கு பனிஷ்மென்ட்.