எஸ்.ஐ. 2 போலிசார் அதிரடி மாற்றம்! கடத்தல் புகார் எதிரொலி:- வேலூர் டி.ஐ.ஜி. நடவடிக்கை!

ம.பா.கெஜராஜ்,
எஸ்.ஐ. 2 போலிசார் உள்ளிட்ட மூவர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள், கடத்தல் புகார் வரபெற்றதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. ஆன் விஜயா அவர்கள் நடவடிக்கை!
திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு தாலுக்கா,பெருமாநெல்லூர் கிராமம், விஜயராகவ சாமி தெருவைச் சேர்ந்தவர்,ஹரிகிருஷ்ணன், இவரது தந்தையின் பெயர் ஆறுமுகம், இவர் நெல் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அரிகிருஷ்ணன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதே போல் காவல் உயரதிகாரிகளுக்கும் புகார் அனுப்பிவைத்துள்ளார்.
பி.இ.படித்துக் கொண்டிருக்கும் தன்னை கடத்தி அடைத்து வைத்த எஸ்.ஐ., அதற்கு உடந்தையாக இருந்த போலிசார் மற்றும் 25- ஆயிரம் பாக்கிக்காக இரண்டரை லட்சம் எழுதி வாங்கிய ரைட்டர் ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டு தான் அந்த புகாரில் இடம்பெற்றுள்ளது.
இந்த புகார் வேலூர் சரக டி.ஐ.ஜி., முனைவர் ஜ.ஆனிவிஜயா,இ.கா.ப. அவர்கள் பார்வைக்கு சென்றதும், அவர் துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் இ.கா.ப. அவர்கள், புகார்தாரரிடம் விசாரித்தார்.
அதன் பின்னர் மேற்சொன்ன புகார் தொடர்பாக சோளிங்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பசலைராஜ், காவலர்கள் சுந்தரபாண்டி மற்றும் பரத் ஆகிய மூவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு காரணமான நடராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.