அல்லி ராணியின் வசூலோ....!வசூல்!!

T.Mohamad irffan,
தமிழகத்தின் எல்லை மற்றும் ஆந்திரமாநிலம் சித்தூர் எல்லை இரண்டையும் இணைக்கும் பகுதியில் உள்ள நிலத்தில் தமிழக அரசின் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது.,
அந்தக் கடைக்கு சித்தூர் சரக்கு வியாபாரிகள் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அரசு கல்லாவை நிரப்பும் அளவுக்கு பாக்ஸ் கணக்கில் மதுக்களை வாங்கி செல்கின்றனர்.
அப்படிப்பட்ட வியாபாரிகளைப் பார்த்ததும் குஷியாகிவிடும் டாஸ்மார்க் பணியாளர்கள், எம்.ஆர்.பி.ரேட்டை விட பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்து தனியாக கல்லா கட்டுகிறார்கள்.
லட்சகணக்காக புரளும் இந்த தகவலை அறிந்த சம்மந்தப்பட்ட கடை உள்ளிட்டவைகளுக்கு அலுவலரான அல்லிராணி ஒருவர், கார் எடுத்துக் கொண்டு அங்கு சென்று கடமையாற்றியிருக்கிறார்.
எம்.ஆர்.பி.ரேட்டை விட எப்படி நீங்கள் கூடுதலாக சரக்கு விற்கலாம் என்று காச் மூச்சென்று சவுண்டு விட்டு பந்தா காட்டியுள்ளார்.
உன்னை ஸ்பாட்டிலேயே சஸ்பெண்டு செய்துவிடுவேன் என்று சொல்லி டாஸ்மாக் பணியாளரை முட்டி போட வைத்திருக்கிறார்.
நடுங்கிப்போன விற்பனையாளர் அம்மா தாயே என்று கெஞ்சி இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அல்லிராணி யோவ் இனி அப்படியே விற்பனை செய்? நான் ஒன்றும் கண்டுக் கொள்ள மாட்டேன். ஆனால் எனக்கு சேர வேண்டியதை கொடுத்து விடு? அதற்கு முன்பணமாக ஒரு லட்சம் கொடு என்று லாவகமாக பணத்தை கழற்றி வந்துள்ளார்.
இது குறித்து விற்பனையாளர்கள் மற்றும் சூப்ரவைசர்கள் மத்தியில் தகவல் பரவிவரும் நிலையில், அந்த அல்லிராணி ஆபிசுக்கே வருவதில்லை, தினமும் கையெழுத்தை எப்படி போடுகிறார் என்பது போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்களாம்.
அது சரி,