மாணவி தற்கொலைக்கு மதமாற்றும் முயற்சி காரணம் இல்லை! செட்டப் அம்பலம்!

ஆர்.ராஜேஷ்குமார்,
மாணவி தற்கொலைக்கு மதமாற்றும் முயற்சியே காரணம் என்ற புகார் போலியானது என்பது தற்போது ஆய்வின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரி பெற்றோர் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த +2 மாணவி லாவண்யா தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்தார்.
அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி பள்ளி விடுதியில் விஷம் அருந்திய நிலையில் 19-ம் தேதி அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எனவே அவர் உடல் பிரே பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்காமல் பெற்றோர்கள் உறிவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே மதுரைக்கிளை உத்தரவின் பேரில் அவரது உடல் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாலேயே அவர் விஷம் குடித்ததாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அந்த மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாலேயே அவர் விஷம் குடித்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருவதோடு ஒரு வீடியோவையும் வெளியிட்டது.
தற்கொலை முடிவுக்கு பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி வேலை வாங்கியதே காரணம் என்று மாணவி வாக்குமூலம் அளித்த புதிய வீடியோ வெளியானது.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். எனவே வழக்கை விசாரித்த நீதிபதி வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய அந்த செல்போன் சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது.
அந்த சோதனையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றும் முயற்சியே காரணம் என்ற புகார் போலி என்பது அம்பலமானது.
தற்கொலை முடிவுக்கு பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி வேலை வாங்கியதே காரணம் என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியது.
பிரியங்கா கனூப், மருத்துவர் ஆனந்த் உள்ளிட்ட நால்வர் குழுவினர் விசாரணை நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சையில் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைவேலுவிடம் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி-யிலிருந்து சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரிய நிலையில் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.