போலிசாரை மிரட்டிய அரவாணிகள்? அரசு அடக்குமா?

போலிசாரை மிரட்டிய அரவாணிகள்? அரசு அடக்குமா?

டி.முகமது இர்பான்,

 தங்கல் கடமையை செய்ய வந்த போலிசாரை மிரட்டியதோடு, ஆபாச வார்த்தைகளால் அசிங்கப்படுத்திய அரவாணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது.

 கடந்த இரன்டு நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது.

முழுக்க முழுக்க ஆபாசமான வார்த்தைகள் மற்றும் அறுவருப்பான செய்கைகள் அதில் அடங்கியிருந்தன.

 தங்கள் கடமையை ஆற்ற வந்த காவல் அதிகாரிகளை, அரவாணிகள் இப்படி செய்து அவமதித்திருப்பது பலரையும் கோபமடைய செய்ய வைத்துள்ளது.

 இந்த சம்பவம் கரூர் நகரில் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அதாவது கரூர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திருநங்கைகளுக்கும், பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகளிடம் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் 2 அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

 இந்த தகவல் அறிந்து அதை தடுக்க வந்த போலீசாருக்கும், வீடியோ எடுக்க வந்த செய்தியாளர்களும் அடி விழுந்தது, அதுமட்டுமின்றி துணியை தூக்கி எல்லாவற்றையும் காட்டியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

 இதன் காரணமாக சுமார் 3 மணி நேரமாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர்.

இவ்வளவு பிரச்சனைக்கும் சில அரவாணிகளே காரணம்.

 இந்த ஆபாச செயலில் ஈடுபட்ட அராஜக அரவாணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் அவா!

  தமிழகத்தில் அரவாணிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல இடங்களில் இவர்கள் கூலிப்படைகளாகவும் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.