சிக்கன் கிரேவி...கூல்டிரிங்க் சாவில் திடீர் திருப்பம்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
கோவில்பட்டியில், ஓட்டலில் வாங்கி வந்த சிக்கன் கிரேவி சாப்பிட்டதால் தாய் மகள் செத்தனர் என்று ஒரு செய்தி வெளியானது.
பிரேதங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு ஏற்பாடு செய்த போலிசாரின் விசாரணையில் அது பொய் என்று தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சனையில் காம லீலைகள் சமாச்சாரம் மறைந்திருப்பதும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டனர் என தெரியவந்தது.
இது பற்றின விவரம் வருமாறு,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவனின் மனைவி கற்பகவல்லி. அவரது மகள் பெயர் தர்ஷினி. இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12ஆம் தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென மயங்கி விழுந்தனர்.
அதைப் பார்த்தவர்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்தனர்.இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்திய பொழுது சிக்கன் கிரேவியும், குளிர்பானமும் தான் சாவுக்கு காரணம் என தெரியவந்தது.
பின்னர் நடந்த உடற்கூறு ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தாய், மகள் சாவுக்கு கிரேவி, குளிர்பானம் காரணம் இல்லை, அதில் விஷம் கலந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது.
உஷாரான போலிசார், கற்பகவல்லி பயன்படுத்தி வந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், கற்பகவல்லி வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் கற்பகத்திற்கு அடிக்கடி போன் செய்திருந்தது தெரியவந்தது.
கற்பகவல்லிக்கும் வீரப்பெருமாளுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இடையில் வீரப்பெருமாளுடன் பேசுவதை கற்பகவல்லி தவிர்த்து வந்துள்ளார். இதனால்அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த படம் மற்றும் வீடியோவை காட்டி வீரப்பெருமாள் மிரட்டி வந்தாராம்.
கற்பகவல்லி போட்டோ வீடியோவை கணவர் குடும்பத்தினரிடம் காண்பித்து விட்டால் பெருத்த அவமானம் ஏற்பட்டு விடும் என்ற கருதிய கற்பகவல்லி குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் நம்புகிறார்களாம்.
எனவே தற்கொலைக்குத் தூண்டிய கள்ளக்காதலன் வீரப்பெருமாளை போலீசார் கைது செய்துள்ளனர்.