கஞ்சா கிடங்கு ஆன ஜோலார்பேட்டை இரயில் நிலையம்!

ஜி.கே.சேகரன்,
ஜோலார்பேட்டை இரயில்வே நிலையத்தில் கௌகாத்தி இரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல். - அசாம் மாநில இளைஞர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் சேலம் உட்கோட்ட சிறப்பு போலீசார் முத்துவேல் ரயிலில் ஏதேனும் கஞ்சா கடத்தப்படுகிறதா என்று சோதனை மேல் கொண்டனர். அப்போது கௌகாத்தி பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெனரல் கோச்சில் கடத்திவரப்பட்ட நான்கு கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
மேலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.டி கைருல் இஸ்லாம் வயது 34 என்பவரை பிடித்து ஜோலார்பேட்டை இருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரயில் நிலையத்தில் வைத்துதான் கஞ்சா பகிரப்படுவதாக கூறப்படுகிறது, அதை பற்றியும் விசாரிப்பார்களா?