ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்!போட்டுக் கொடுத்த கேமிரா!

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்!போட்டுக் கொடுத்த கேமிரா!

  ம.பா.கெஜராஜ்,

  சொகுசு கப்பலில் நடந்த போதைப் பார்ட்டியை கையும் களவுமாக பிடித்ததாக பாலிவுட் நாயகன் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீது வழக்கு பதியப்பட்டு கைதானார்.

  மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந அவரை ஜாஇனில் நீதிமன்றம் வெளியில் அனுப்பியுள்ளது.

 இந்நிலையில் ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அதிரடி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை செட்டப் என கூறினார்.

 அதே போல் மேற்கண்ட வழக்கில், பொது சாட்சியான பிரபாகர் சாயில் என்பவரும் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக தெரிவித்திருக்கிறார்.

   போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ந்தேதி சந்தித்து பேசியதாக கூறியுள்ளார்.

பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதில் அவர்கள் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டில் கூறியது போல, கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிகவளாகம் அருகில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

 இதில் பூஜா தத்லானியின்  புளு நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் இருந்து இறங்கும் பெண் ஒருவர், கிரன் கோசவியிடம் பேசும் காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

 கிரன் கோசவி, அந்த பெண், சாம் டிசோசா ஆகிய 3 பேரும் அவர்களது வாகனங்களில் தனித்தனியாக அங்கு இருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

 போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 பேரும் சந்தித்து பேசியது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டபோது அவர் பதில் அளிக்கவில்லையாம்.

 மேலும், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிரன் கோசவி வந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாம். ஆகவே போலீஸ் போல நடித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மற்றொரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.    ஆக 25 கோடி பேரம் நடந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் ஆர்யன்கான் மேட்டரை சூடு ஆறாமல் பார்த்துக் கொள்ளும் போல.