அஸ்வினியின் வீடியோவால் உருவான திட்டங்கள்! நரிக்குறவர் இல்லங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அஸ்வினியின் வீடியோவால் உருவான திட்டங்கள்! நரிக்குறவர் இல்லங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ம.பா.கெஜராஜ், 

அஸ்வினி என்கிற நரிக்குறவர் பிரிவைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன் பேசி வெளியிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது. அரசு திட்டத்தின் கீழ் உணவளிக்கப்பட்ட போது அதை சாப்பிட விடாமல் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விரட்டியதாகவும், அரசு திட்டங்களில் இப்படி செய்யலாமா என்றும், நாங்கள் எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குவோம், அப்புறம் பார்த்துக்கலாம் என்றும் அதில் அஸ்வினி பேசியிருந்தார்.

 அஸ்வினியின் இந்த வீடியோ முதல்வரின் பார்வைக்கு சென்றதன் விளைவு, அதை குறித்து விசாரித்து இன்றைக்கு நறிக்குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தினருக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  அதற்காக சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்ற அவர், நரிக்குறவர் குடியிருப்புக்குள் சென்று அமர்ந்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.

 எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காத பட்டா, சாதி சான்று எல்லாமே எங்களுக்கு முதல்வர் உத்தரவால் கிடைத்தது ரொம்ப நன்றி என்ற அவர்கள் மகிழ்ச்சியில்  திக்குமுக்காடினார்கள்.

இது தொடர்பாக  வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

  பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ .4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் -  தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார் .   தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று ( 4.11.2021 ) செங்கல்பட்டு மாவட்டம் , திருக்கழுக்குன்றம் வட்டம் , பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் . குடும்ப அட்டைகள் , வாக்காளர் அடையாள அட்டைகள் , சாதிச் சான்றிதழ்கள் , நல வாரிய அட்டைகள் , பயிற்சிக்கான ஆணைகள் , வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார் .

   மேலும் , கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல் , அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை ஆகியவற்றையும் வழங்கினார் .

  முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் , பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 நபர்களுக்கு ரூ .3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் . 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள் , 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் , 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் , 88 நபர்களுக்கு இருளர் ( ST ) சாதி சான்றிதழ்கள் , 34 நபர்களுக்கு நரிக்குறவர் ( MBC ) சாதிச் சான்றிதழ்கள் . 34 நபர்களுக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகள் , 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள் வழங்கினார்.

      சுயவேலை வாய்ப்பினை உருவாக்க செயற்கை முறை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்க 18 நபர்களுக்கு பயிற்சி ஆணைகள் , முத்ரா திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு தலா ரூ .1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ .12 இலட்சம் கடனுதவி , சிறுதொழில் செய்வதற்கான வங்கிக்கடன் திட்டத்தின் கீழ் 33 நபர்களுக்கு ரூ .10,000 / வீதம் 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனுதவி , 75 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்மொழிவு ஒப்புதல் , மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் ( MAPS ) நிறுவனத்தின் மூலம் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும்

பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆணை , என மொத்தம் 282 நபர்களுக்கு ரூ .4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை  முதலமைச்சர்  வழங்கினார்.

   இந்நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து பேசிய பயனாளிகள் திருமதி பவானி மற்றும் திருமதி அஸ்வினி ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள் .

    அவர்களது அழைப்பினை ஏற்று , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று , குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார் .

   அதனைத் தொடர்ந்து  முதலமைச்சர்  நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து , அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்து , கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் .

  மேலும் , பூஞ்சேரி ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் , மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி , அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார் .

  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் , நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி , முதலமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் , இ.ஆ.ப. , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப. , செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ( பொறுப்பு ) மரு.எம்.சுதாகர் , செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி து.செம்பருத்தி , திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு . இதயவர்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

முதல்வரின் வலைதள அறிக்கை.

பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று ( 04.11.2021 ) வழங்கியது குறித்து , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பநே திராவிட இயக்கத்தின் பணி சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல ; மரியாதை.

 அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு .அதனைத்தான் , " நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது " என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.

  திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம் . ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே !

 ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து , சமூகநீதியை நிலைநாட்டி . பானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது .

    பூஞ்சேரி கிராமத்து இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்குப் பட்டா , சாதிச் சான்றிதழ் , வாக்காளர் அடையாள அட்டை , வாழிடச் சான்றிதழ் . முதியோர் உதவித்தொகை , நல்வாரிய அடையாளச் சான்றிதழ் . பயிற்சி சான்றிதழ் , வங்கிக் கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன் .

  இருளர் மற்றும் குறவர் இன வாழ்வின் ஒளியேற்றும் நாள் இது ! இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன் ,

    இவற்றையெல்லாம் செய்யும்போது , திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது !

   பெரியார், அண்ணா கலைஞர் ஆகியோரை நெஞ்சிவேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன் . நடாடும் கோயில் திருப்பணி தொடரும்

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9