அதிமுகவில் இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்!பண்ருட்டியார் சூசகம்:- எடப்பாடி தரப்பு பதற்றம்!

அதிமுகவில் இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்!பண்ருட்டியார் சூசகம்:- எடப்பாடி தரப்பு பதற்றம்!

G.Sasnthakumar,

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கும் வாய்ப்பினை எனக்கு அளித்ததுக்கு நன்றி. எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி இருக்கிறோம்.

 இங்குள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசி உண்டு என்பதை அதிகாரப்பூர்வமாக கூறுகிறேன். நமது சமுதாய கட்டமைப்பில் உழைப்போர் தாழ்ந்தோராக இருப்பார்.

  ஆனால் எம்ஜிஆர் கையெழுத்து போட்டால் உழைப்போரே உயர்ந்தவர் என, எழுதித் தான் கையெழுத்து போடுவார். எனவே உழைப்போரை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

  கவிதையில் இடைச்செருகல்களை கற்றறிந்த புலவர்கள் அகற்றுவார்கள். அதேப் போல், அதிமுக எனும் இந்த மாபெரும் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

  இதுநாள் வரை அமைதி காத்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது அதிமுகவில் உள்ள இடை செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

அதே சமயம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.