எனக்கு ஏதேனும் நடந்து விட்டால்:- அமெரிக்கா சதியை மையப்படுத்தி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் உருக்கம்!

எனக்கு ஏதேனும் நடந்து விட்டால்:- அமெரிக்கா சதியை மையப்படுத்தி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் உருக்கம்!

ம.பா.கெஜராஜ், 

எனக்கு ஏதேனும் நடந்து விட்டால், இந்த வீடியோவைப் பார்த்து அதிலுள்ள அதிகார பலமிக்கவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்று  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உருக்கமாக பேசி வருகிறார். 

   இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கட்சி சார்பில் பல பொது கூட்டங்களை நடத்தி வருகிறார்.  அதில், வெளிநாட்டு சதி பற்றி விசாரணை நடத்த வேண்டும், விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார்.

 அப்படியிருக்க, பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார்.  அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது,  நான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகாரபலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதி துறை ஒன்றும் செய்து விட முடியாது. எனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தரவேண்டும். அதற்காக என்னிடம் உள்ள வீடியோவை ஆதாரமாக பயன்படுத்துங்கள்.

  நீங்கள் எனக்கு இரண்டு உறுதிமொழிகளை அளிக்க வேண்டும்.

  எனக்கு ஏதேனும் நடந்து விட்டால், பின்னர் வீடியோவில் நான் குறிப்பிட்டுள்ள பெயரை கொண்ட நபர்களுக்கு எதிராக நீங்கள் போராடி, அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விட்டோம் என உறுதி செய்ய வேண்டும். 

 அமெரிக்க சதியால் தனது அரசு கவிழ்க்கப்பட்டது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிற இம்ரான் கான், விலைவாசி உயர்வையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  அவர் பேசும்போது, இன்று தக்காளி மற்றும் சிக்கன் என்ன விலையில் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். 

இதுபற்றி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மக்களிடம் சென்று விலைவாசி உயர்வை பற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? சிக்கன் விலை இரட்டிப்படைந்து விட்டது.  ஏனெனில், ஹம்சா ஷெபாஸ் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என கான் கூறியுள்ளார்.

 இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவித்து உள்ளது. பைசலாபாத் தவிர்த்து சியால்கோட் நகரில் நடந்த மற்றொரு பேரணியில் பேசிய இம்ரான் கான், தன்னை கொல்ல வெளிநாட்டில் சதி நடக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.