சோகம்-கண்ணீர்- கூக்குரல்:- கஞ்சி வாரம் கடைபிடிக்கும் முல்லைத்தீவு மக்கள்! சிங்கள ராணுவத்தினரும் குடித்தனர்!

சோகம்-கண்ணீர்- கூக்குரல்:- கஞ்சி வாரம் கடைபிடிக்கும் முல்லைத்தீவு மக்கள்! சிங்கள ராணுவத்தினரும் குடித்தனர்!

ம.பா.கெஜராஜ்,

 முள்ளிவாய்காலில், சோகம், கண்ணிர்,கூக்குரல், 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிவரை கஞ்சி வாரம் கடைபிடிக்கும் முல்லைத்தீவு மக்கள்! சிங்கள் ராணுவத்தினரும் குடித்தனர்! அங்கு ஓலக்குரல் எழுந்து வருகிறது.

 அய்யோ...எம்மக்கள் எங்கே? காதுகளில் குண்டு சத்தம் கேக்குதே, ரத்தவாடை வீசுதே என நெஞ்சு பிழியும் குரல்கள் எத்திசையிலும் கேட்கிறது.

இது பற்றின விவரம் வருமாறு,

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, மக்கள் புரட்சி, அரசியல் சிக்கல், ஆட்சி மாற்றம் என தீவே பற்றி எரிந்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விடுதலை புலிகளை மையப்படுத்தி புதிய கிலி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  அந்நாட்டில் கடந்த 2009 ஆண்டு சிங்கள் படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே ஏற்பட்ட இறுதிப் போரில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 அந்த கொடிய படுபாதக செயலுக்கு பழி வாங்கும் வகையில், விடுதலைப்புலிகள் குழுவானது  சிங்கள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக பிரபல ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியானது.

 இந்த செய்தி இலங்கை நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இந்தியா இலங்கை வட்டாரங்களில் பாதுகாப்பு பணிகள்  தீவிரமாக்கப்பட்டிருகிறது.

 ஆனால், முள்ளி வாய்க்கால், முல்லைத்தீவு உள்ளிட்ட போர் நடந்த பகுதிகள் பரபரப்பு ஏதும் இல்லை. ஏனெனில் அங்கு துக்கம் கடைபிடிக்கும் விதமாக கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது.  மேற்கண்ட பகுதிகளில். நீர், அரிசி,  உப்பு,  ஆகியவற்றை கலந்து கொதிக்க வைத்த கஞ்சியை விநியோகிக்கும் நிகழ்வு முல்லைத்தீவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதை முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் என்கிறார்கள்.

  இலங்கை இறுதி யுத்தத்தின் வலி மிகுந்த பல சம்பவங்கள் இந்த கஞ்சி காலத்தில் நினைவு கூறப்படுகிறது.

"2009-ஆம் ஆண்டு இறுதி நாள்களில் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, உணவுப் பொருள்கள் இல்லை. ஒரு வீட்டில் 100 கிராம் அரிசி கிடைத்தாலே அதை கஞ்சியாகக் காய்ச்சி 10 பேர் வரை குடிக்கும் நிலை இருந்த நிலையை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் அதே போன்ற கஞ்சியைக் காய்ச்சி விநியோகிக்கும் இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்துகிறார்கள்.

   "போரில் எத்தனையோ பேர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காயப்பட்ட பலர் மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் சிந்தித்தான் இறந்து போனார்கள். நாங்கள் காலில் விழுந்தோம். கையேந்திக் கும்பிட்டோம். ஆனால், யாரும் காப்பாற்றவில்லை," என்று போரின் கடைசி நாள்களை நினைவுகூறுகின்றனர்.

 "ஒரு பகுதி மக்கள் குண்டுகளால் இறந்து கொண்டிருந்தபோது, இன்னொரு புறம் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருந்தார்கள்.

பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் குழப்பத்திலும் இலங்கை சிக்கியிருக்கும் நிலையில் இறுதிப் போர் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வு மே 18-ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. இதற்கு முந்தைய ஒரு வாரத்துக்கு அதாவது மே மாதம் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிவரை  முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படுகிறது.  

  முள்ளியவிளையில் நடந்த நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கஞ்சி காய்ச்சி விநியோகித்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற சிங்கள போலிசாரும், ராணுவத்தினரும் ஈழ தமிழ் தாய்மார்களிடம் கஞ்சி வாங்கி குடித்தனர். மேலும் வாகனங்கள், பேருந்துகளில் செல்வோருக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.

இத்தகைய கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வுக்கு காவல்துறையின் அனுமதி இல்லை. அதே நேரத்தில், இந்த நிகழ்வுகளை காவல்துறையினர் தடுப்பதும் இல்லை என்று இதை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள்.

 குறிப்பாக தீலிபன் நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கஞ்சி வழங்கும் நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு சோகத்துடனும், கண்ணீருடம் கூக்குரலிட்டு அழுதது வானத்தையை கலங்க வைக்கும் விதமாக இருந்தது.

 அய்யோ...எம்மக்கள் எங்கே? காதுகளில் குண்டு சத்தம் கேக்குதே, ரத்தவாடை வீசுதே என நெஞ்சு பிழியும் குரல்கள் எத்திசையிலும் கேட்கிறது.   

 அதேபோல், இந்த ஆண்டு சிங்கள தீவு  புரட்சியால் உருகுலைந்து உலக அரங்கில் கேவலப்பட்டுக் கிடக்கும் இந்த சூழலை, பெண்கள் மேலும் சாபம் விட்டு தீர்த்தனர்.

    முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலைச் சுற்றியுள்ள பல சாலைகளில் குறைந்தது 10 இடங்களில் ராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

   திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரும் வழியில் பல ராணுவ முகாம்களும், கூடவே சாலைத் தடுப்புகளும் காணப்படுகின்றன. பல இடங்களில் அடையாள அட்டையைக் காட்டிய பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

முல்லைத் தீவில் இருந்து முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் குறுகிய பாலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வழக்கமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடக்கும் இடத்தில் ஒரு சிலரைத் தவிர, எண்ணிக்கையில் அதிகம் அனுமதிப்பதில்லை. அனுமதிக்கப்பட்டவர்களை சுற்றிலும் கூட சிங்கள் காவலர்களும், ராணுவ வீரர்களும் கண்காணிக்கிறார்கள்.

 எந்த தடையை ஏற்படுத்தினாலும், துக்கம் அனுஷ்டிப்பதை எப்படிங்க தடுக்க முடியும் அது உயிர்துடன் கலந்த உணர்வு அல்லவா என்கிறார்கள் சொந்தங்களை இழந்த அப்பகுதி மக்கள்.