பெண் போலிசாரை டார்ச்சர் செய்த நடத்துனர்! முதல்வர் உத்தரவை புறம் தள்ளிய மாவட்ட காவல் அலுவலர்!!

பாண்டி.
அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் போலீசாரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்டு பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து செய்யாறு புறப்பட்ட அரசு பேருந்தில் நடத்துனருக்கும், பெண் காவலர்களுக்கும்கடும் வாக்குவாதம் நடந்தது.
அந்த பேருந்தில் போளூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களான ராதா மற்றும் ருத்ரா என்பவர்கள் பணிக்காக சென்றுள்ளனர்.
அப்போது பேருந்து நிலையத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் வெளி வந்த அரசுப் பேருந்து அவலூர்பேட்டை சாலை பிரியும் சிக்னல் அருகே கடந்த போது பெண் போலீசாரிடம் டிக்கெட் கேட்டு நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மாவட்டத்த்துக்குள் பயணம் செய்ய டிக்கெட் அவசியமில்லை எனவும் அடையாள அட்டை இருந்தால் போதும் என பெண் காவலர் நடத்துனரிடம் கூறியுள்ளார்.
அப்போது இது போன்ற உத்தரவுகள் எதுவும் போக்குவரத்து துறைக்கு இல்லை எனவும் டிக்கெட் அல்லது வாரன்ட் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் முன்னிலையில் இரு பெண் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிக்கெட் எடுக்க மறுத்த பெண் காவலரிடம் பேருந்தில் இருப்பவர்கள் எல்லாம் அறிவே கிடையாது உங்களுக்கு மட்டும்தான் இருக்கு என்று கூறிய நடத்துனர் கிருஷ்ணன் மீண்டும் பெண் போலீசாரிடம் டிக்கெட் எடுக்க கோரினார்.
அப்போது ஓட்டுநர் பேருந்தை சுமார் பத்து நிமிடத்திற்கு மேலாக சாலையோரம் நிறுத்திவிட்டு பெண் காவலரை கீழே இறங்கி வேற பேருந்தில் ஏறி சென்று போ என்று ஒருமையில் பேசியுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த பெண் காவலர் பேருந்தை விட்டு இறங்காமல் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
போக்குவரத்து துறை அதிகாரி சொல்லட்டும், நியாயமான கோரிக்கையை முறையிடுகிறேன் அவர்கள் வந்து டிக்கெட் அல்லது வாரண்ட் இருந்தால் மட்டுமே பயணிக்கலாம் என்ற சட்டம் இருந்து வருகிறது என்று கூறினால் பிறகு பேருந்தை விட்டு கீழே இறங்குகிறேன் என போலிசார் சொன்னார்கள்.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் வண்டியை எடுக்க கட்டாயப்படுத்தினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணி பெண்காவலர்கள் இறங்கினர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாக பரவிய நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி இ.கா.ப. அவர்கள், ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
காவலர்கள் வாரண்ட் இல்லாமல் போகும் நிலையில் டிக்கட் எடுக்குமாறு அறிவுறுத்தி வயர்லெஸ்ஸில் பரிமாறிய தகவலை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அறிவிப்பின்படி இலவச பயண அடையாள அட்டை வரும் வரை , டிக்கட் எடுத்து தான் ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்
ஆனால் தங்களது சொந்த வேலைகளுக்கு செல்வதை தவிர பணி சம்பந்தமாக செல்லும்போது காவலர்கள் அடையாள அட்டை காண்பித்து விட்டு பயணம் செய்யலாம் என தமிழக காவல்துறையை அதிகாரி சைலேந்திரபாபு அறிவித்திருந்த நிலையில் பெண் காவலர்களை மட்டும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக பெண் காவலர்கள் சங்கடப்படுகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இப்படித்தான் அரசு அறிவித்தது.
தமிழக காவல் துறையில் டிஜிபி தலைமையில் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என சுமார் 1,21,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல் மகளிர் போலீஸார்.
இந்நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழக முதல்வர் காவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, சிறப்பு குறைதீர்க்கும் முகாம், அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்துக்குள் அடையாள அட்டைகளைக் காட்டி இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிதார்.
இந்த அறிவிப்பை காவல் துறையினர் பெரிதும் வரவேற்றனர்.