சென்னையில் பேருந்து தீப்பிடித்தது!

சென்னையில் பேருந்து தீப்பிடித்தது!

க.முகில்,

 கோயம்பேடு அருகே பேருந்து ஒன்று தீப்பிடித்தது.

இது பற்றின விவரம் வருமாறு, 

 இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் என்ஜினியிலிருந்து புகை கிளம்பியது. இதைக்கண்ட டிரைவர் உடனே பயணிகளை அரசு பேருந்தில் அவசர அவசரமாக இறக்கினார்.

 பயணிகள் இறங்கிய ஒரு சில நிமிடங்களில் பேருந்தில் தீ பற்றி எரிந்தது. டிரைவர் பயணிகளை உடனடியாக பேருந்தில் இருந்து இறங்க சொன்னதால் அனைவரும் உயிர் தப்பினர்.

  அரசு பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.