ஒரு கோரிக்கை...பல விண்ணப்பம்..விரக்தியில் உண்ணாவிரதம்!!

ஒரு கோரிக்கை...பல விண்ணப்பம்..விரக்தியில் உண்ணாவிரதம்!!

  பி.ஆனந்தன்,

பிரதமர் திட்டத்தில் வீடு வழங்காததை சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தனியாக ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ராஜாராம். இவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

  இந்நிலையில் அவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனி ஆளாக போராட்டம் நடத்தி வருகிறார்.

  அது பற்றி அவர் தெரிவித்ததாவது,

 பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கோரி களம்பூர் இந்தியன் வங்கி மூலம் படிவம் தயார் செய்து விட்டு பத்திர நகல் , என் மனைவியின் பெயரில் பட்டா உள்ளதால் அவர் ஆதார் அட்டை , குடும்ப அட்டை இந்தியன் வங்கி முத்திரையிட்ட படிவம் ஆகியவற்றை புலவன்பாடி ஊராட்சி எழுத்தர் சரவணன் அவர்களிடம் ஒப்படைத்து அலுவலகத்தில் பதிய கோரினோம்.

  அவர் ரூ .10,000/- செலவாகும் என்று கூறி 17.09.2018 அன்று ரூ .10,000/- பெற்றுக் கொண்டு பதிவு செய்யாமலே காலம் தாழ்த்தியதால் அனைத்து ஆவணங்களுடன் 04.11.2019 அன்று எழுத்தர் சரவணன் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தேன்.

   அதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

  மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி குடியரசு தினத்தன்று கிராம மக்கள் சபா கூட்டத்தில் மனு கொடுத்தேன்.

   அதற்கும் இதுவரை பதில் இல்லை.

   இதுவரை பதிவு செய்யாமல் உள்ள எழுத்தர் சரவணன் தற்போது ரூ .30,000/- கொடுத்தால்தான் ஆர்டர் காப்பி வாங்க முடியும் என்ற பொய்யான தகவல் அளித்து ஏமாற்றுகிறார்.

   எனவே இவ்வளவு ஏமாற்று வேலை செய்வதை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருப்பதாக சொன்னார்.