முதல்வர் அமர்ந்த காவல் நிலைய நாற்காளியை பத்திரப்படுத்துவோம்!

ம.பா.கெஜராஜ்,
முதலமைச்சர், மந்திரிகள் போன்றவர்கள் ஆய்வு நடத்த வருகிறார்கள் என்றால் போதும், அதிகாரிகள் விழுந்து விழுந்து ஏற்பாடு செய்து, ஒரு அரங்கில் ஆய்வுகளை நடத்தி முடித்துவிடுவார்கள்.
ஆனால் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல இடங்களில் நேரில் இறங்கிச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அப்படியிருக்க தர்மபுரியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அதியமான் கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்று எஸ்.ஐ. அமரும் நாற்காளியில் கூலாக அமர்ந்தார்.
பதறிப்போன ஐ.பி.எஸ் கள் ஓடி ஓடி சேவகம் செய்தனர்.
அதையெல்லாம் கண்டு கொள்ளாத முதலமைச்சர்,பதிவேடுகளை சரிபார்த்தார்.
பணியிலிருந்த காவலர்கள் ஒவ்வொறுவரை அழைத்து பேசினார்.
இதனால் மகிழ்ந்த காவலர்கள், முதலமைச்சர் அமர்ந்த எங்கள் ஸ்டேஷன் நாற்காளியை பத்திரப்படுத்தி வைப்போம் என்று உணர்சி பொங்க சொல்கிறார்கள்.
அதே போல் இன்று ஆதிதிராவிட நலத்துறை பராமரிப்பில் உள்ள மாணவர் விடுதிக்குள் நுழைந்து மாணவர்களிடம் நேரடியாக பேசினார் முதல்வர்.
அப்போது மாணவர்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் மற்றும் போர் வாட்டர் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
எனவே உடனடியாக ஆர்வோ வாட்டர் வழங்கும்படி முதல்வர் உத்தரவிட்டார்.
அதே போல் திடீரென்று காரை நிறுத்துப்பா டிரைவர் என்று சொன்ன முதல்வர் பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் சென்று விசாரித்தார். முதல்வரை பார்த்த மாணவிகள் துள்ளி குதித்து மகிழ்ந்தனர்.