பொருளாதார சிக்கலில் 69 நாடுகள்? இந்தியா அதில் இல்லவே இல்லை! சேராமல் இருக்க வேண்டுகோள்!!

ம.பா.கெஜராஜ்,
பொருளாதார சிக்கலை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி மற்றும் ஐ.நா. போன்றவை எச்சரிக்கை மணி அடித்துள்ளன. நல்ல வேளை இப்போதைக்கு அந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அதில் இடம் பெறக்கூடாது எனவும் வேண்டுகோள்.
இது பற்றின விவரங்களைப் பார்ப்போம்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது.கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. கூடவே சமையல் எண்ணெய் தொடங்கி கோதுமை வரை பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
இதனால் பல நாடுகளில் பொருளாதார சிக்கல் உருவாகி இலங்கையைப் போன்றே பொருளாதார பாதிப்பு, கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
அப்படியிருக்க, பிப்ரவரி 15-ம் தேதி உக்ரைன் மீது இரஷ்யா போர் தொடங்குவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக உலக வங்கி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் 70 நாடுகள் பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற சூழலில் இருப்பதாக தெரிவித்து இருந்தது.
இந்த நாடுகளில் 2022-ம் ஆண்டில் இந்த நாடுகளில் பொருளாதாரம் அழியும் சூழலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள பொருளாதாரம் சார்ந்த அறிக்கையில் 107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும், கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விலை அதிகரிக்கும்.கடன் சுமையால் இந்த நாடுகளில் நிதிநிலை மோசமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் 170 கோடி மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் விக்கெட் வீழ்ந்துவிட்டது. மேற்குறிப்பிட்ட நாடுகளில் 69 நாடுகளில் அதே நிலை ஏற்பட்ட்டிருக்கிறது.
இந்த 69 நாடுகளில் 25 ஆப்ரிக்காவிலும், 25 நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளிலும்,19 நாடுகள் இலத்தின் அமெரிக்காவிலும் உள்ளன.
இந்நிலையில், வலுவடையும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 77.50 ரூபாயைக் கடந்துள்ளது.
இது இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி இறக்குமதிகளை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் என்பதால் இந்தியப் பொருளாதாரத்தில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எனவே, இந்தியாவின் நிதி அமைச்சகம் கோட்டை விட்ட நெறியற்ற கொள்கையினால், பி.எஸ்.இ., சென்செக்ஸ் குறியீடு கடந்த ஏப்ரல் இருபத்தி ஒன்பதாம் தேதி அதிகபட்சமாக 57,975 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.
கடந்த மே 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 52,793 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
இந்த இரண்டு வாரக் காலத்துக்குள் சென்செக்ஸ் 30 குறியீடு 5,182 புள்ளிகள் சரிந்து உள்ளன. இது சுமார் 8.9 சதவீதம் சரிவு.
இந்த சரிவினால், மும்பை பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 265.88 லட்சம் கோடி ரூபாயிலிருந்தது, 241.34 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து உள்ளது.
சுருக்கமாக 24 லட்சம் கோடி ரூபாய் இந்த சரிவில் காணாமல் போயுள்ளது.
இவை, இந்தியாவின் தவறான நிதி நிர்வாகத்தை வெளிப்படுத்தி, அபாய எச்சரிக்கை விடுக்கிறது.
இந்திய நிதி நிர்வாகம் உஷார் அடைந்து, உலக வங்கி எச்சரித்துள்ள நாடுகளின் பட்டியலில் இணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து மற்றும் அவா.