துரைமுருகன் சொன்னது அரசாணையானது!

துரைமுருகன் சொன்னது அரசாணையானது!

 ம.பா.கெஜராஜ்,

   சட்டபேரவை கூட்டத்தொடரின் போது நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மண் எடுப்பது குறித்து முக்கிய சங்க்திகளை சொன்னார். தற்போது அது முதல்வரின் உத்தரவின் பேரில் அரசாணையாக வெளியிடப்பட்டிருக்கிறது.

அதுபற்றின விவரம் வருமாறு,

 கடந்த சில நாட்களுக்கு முன்னர், நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகிலுள்ள கூனியூர் மற்றும் காருகுறிச்சி பகுதிகளில் மண்பாண்ட உற்பத்தியாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்தின்ர்கள்.

  மண்பாண்டம் செய்வதற்காக தேவைப்படும் மண்ணை எடுக்க தடை விதிக்கக்கூடாது என்பவது அவர்களது கோரிக்கை.

  இது போல் தமிழகம் முழுவதிலும் கோரிக்கை எழுந்தது.

  இந்நிலையில்  மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்ற அறிவிப்பை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

  செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.

   மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  இதற்கு முன்னதாக சுற்றுசூழல் அனுமதி பெற்று தான் மண் எடுக்கும் சூழல் இருந்த நிலையில், தற்போது அதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.

 குறிப்பாக, சாலை, பொதுப்பணித் துறை மற்றும் பிற அரசுப் பணிகள் தடையின்றி நடைபெற சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 இதனை திருத்தி தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்டத் தொழில் செய்வோர், செங்கல் சூளை வைத்திருப்போர், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோர் மண் எடுக்க அனுமதி தேவையில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.