பஸ் கண்ணாடியை நொறுக்கிய யானை!

பஸ் கண்ணாடியை நொறுக்கிய யானை!

   அ.ராகுல்,

பஸ்ஸை வழிமறித்த யானை அதன் தந்தத்தால் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீப காலமாக வன விலங்குகளின் இனபெருக்கம் அதிகமாகி வருகிறது.

 அதே போல் காட்டுபகுதியில் உள்ள வன விலங்குகளில் வழி தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் விலங்குகள் நகருக்குள் வரத்துவங்கிவிட்டது.

  இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ் வந்துக் கொண்டிருந்த போது, காட்டு சாலையில் ஆண் யானை ஒன்று பஸ்ஸை இடைமறித்தது.

  ஓட்டுநர் பஸ்ஸை நிறுத்தினார். அப்போது பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை நோக்கி யானை வந்த போது, பஸ்ஸில் பாட்டு பாடிக் கொண்டிருந்தது. அதை ஆஃப் செய்த ஓட்டுநர், அவரது இருக்கையிலிருந்து எழுந்து பின்னால் சென்றுவிட்டார்.

  அப்போது யானை அதன் தந்தத்தால்  கண்ணாடியை உடைத்தது.

  இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் கோவிந்தா கோவிந்தா என்று அலறினர். சற்று நேரம் கழித்து அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது.