அலுவல் பதிவு, கோப்புகள் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்:- ஜிப்மர்

அலுவல் பதிவு, கோப்புகள் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்:- ஜிப்மர்

K.KALAI  

 வருங்காலத்தில் அலுவல் பதிவு, கோப்புகள் எல்லாம் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

 யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற "ஜிப்மர்" மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் பலர் வந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

 இந்நிலையில், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவலர் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ளார்.

   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பதிவு/சேவை புத்தகங்கள்/சேவை கணக்குகளில் உள்ள பொருள் மற்றும் தலைப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் அனைத்துப் பதிவு/சேவைப் புத்தகங்கள்/சேவைக் கணக்குகள் முடிந்தவரை இந்தியில் மட்டுமே இருக்கும்," என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த உத்தரவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.