நடிகை ஷகீலாவின் உருக்கமான பதிவு!

எம்.ரமேஷ் பாபு,
முன்னாள் கவர்ச்சி நடிகை, தான் இன்னும் வாடகை வீட்டில் இருப்பதாவும், சம்பாதித்த பணத்தை எல்லாம் தங்கை எடுத்துக் கொண்டு போய்விட்டார் என்றும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
புகழ் பெற்ற கவர்ச்சி நடிகையாம ஷகீலா மலையாளம் மற்றும் அதன் டப்பிங் படங்களில் நடித்து ஆண் ரசிகர்களை தன் வயப்படுத்தி வைத்திருந்தார்.
இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஷகீலாவின் படங்கள் வெளியான சமயத்தில் பல உச்ச நடிகர்களின் படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது. இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவர்ச்சி நடிகையாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
ஷகீலா தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். யூடியூப்பில் சில பேட்டிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ஷகீலா தற்போது அளித்துள்ள பேட்டி மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.
அதில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ள அவர், விக்கி பீடியாவில் இருப்பதை போல எனக்கு சொந்தமாக வீடு, கார் என எதுவும் கிடையாது. 40 வருடங்களாக நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். ஒருக்காலத்தில் சினிமாவில் ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம் வரை சம்பாதித்தேன்.
என்னுடைய பணத்தையெல்லாம் என் தங்கை எடுத்து சென்றுவிட்டார். வீட்டில் பணத்தை வைத்திருந்தால் வருமான வரி சோதனையில் சிக்கி விடுவேன் என சொல்லி பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்கிறேன் என வாங்கி விட்டு போனார். ஆனால் அவள் திரும்பி வரவே இல்லை. என்னை ஏமாற்றிவிட்டால்.
ஆகவே நான்மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து என் வாழ்க்கையை துவங்கினேன். இப்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.