இந்திய ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைத்து டெக்னிக்கலை அதிகரிக்க திட்டமா?

ம.பா.கெஜராஜ்,
இந்திய ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்க திட்டமா என்கிற கேள்வி எழ தொடங்கியிருக்கிறது.
ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நின்றுவிட்ட இந்த கேள்வி எழுந்துள்ளது., இந்திய ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைநகர் டெல்லி வரை ஓடியிருக்கிறார், 23 வயதான இளைஞர் சுரேஷ் பிச்சார்.
மொத்தம் 350 கி.மீ. தூர ஓட்டத்தின்போது அவர் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். ராணுவத்தில் சேர்வது தான் தன்னுடைய "விருப்பம்" எனக் கூறும் அவர், ஆனால், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நின்றுவிட்டதாகவும் ராணுவத்தில் சேர்வதற்கு ஆர்வம் கொண்டவர்களுக்கு "வயதாகி வருவதாகவும்" தெரிவித்தார்.
14 லட்சம் பேர் பணிபுரியும் இந்திய ராணுவத்தில் சேருவதை இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர், அப்படியிருக்க ராணுவத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேர் ஓய்வுபெறுகின்றனர். மேலும், அவர்களுக்கு மாற்றாக புதிதாக 100 பேர் வரை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் காரணமாக ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும் படையினரின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் வழிகளை தேடிவருவதாக சில செய்திகள் கூறுகின்றன.
ராணுவத்தினருக்கான அதிகப்படியான சம்பளம் மற்றும் ஓய்வூதியமானது, அத்துறைக்கான 70 பில்லியன் டாலர்களில் 53 பில்லியன் பவுண்டுகளை அள்ளி விழுங்குகிறது.
அதாவது பட்ஜெட்டில் அரைசதத்துக்கும் மேலான தொகையை எடுத்துக்கொள்கிறது. ஆக, ராணுவத்தை நவீனமயமாக்கவும் கருவிகளின் பற்றாக்குறையை போக்குவதற்கும் குறைவான பணமே மீதமுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக, ராணுவத்தில் அதிக பணத்தை செலவிடும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. மேலும், அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
மேலும் பாதுகாப்பு ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்க பில்லியன் கணக்கிலான டாலர்களை மத்திய அரசு செலவழித்துக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியான சமீபத்திய தகவலில், குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டும் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கான அல்லது "மூன்று ஆண்டுகள் வரையிலான பணி" திட்டம் குறித்து அரசாங்கம் தீவிரமாக சிந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மனித வீரத்தை மட்டும் சார்ந்திருக்காமல், தொழில்நுட்பம் சார்ந்ததாக ராணுவம் இருக்க வேண்டும்"என பாரத பிரதமர் நரேந்திர மோதி கடந்த காலத்தில் பேசியதை நினைவு கூற வேண்டும். அதே போல் "வேகமாக போரில் வெல்வதற்கான திறன்களை இந்தியா கொண்டிருக்க வேண்டும், நீண்ட கால போர்களில் ஈடுபடுவதற்கான வசதி இல்லை" எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
இதையெல்லாம் நினைவு கூறும் நிலையில் தான், ராணுவ படையினரின் எண்ணிக்கையை குறைக்கும் யோசனை,ஓய்வுபெற்ற அதிகாரியிடமிருந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படி எண்ணிக்கையை குறைப்பதற்கான சரியான நேரம் இதுவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவின் எல்லைகளில் நிலவும் விரோதமான சூழ்நிலை காரணமாக, அணு ஆயுத போட்டி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் ஒரே நேரத்தில் சண்டையிடும் வகையில் இந்திய ராணுவம் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
சீனாவுடனான சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் பல்லாயிரக்கணக்கான இந்திய படையினர் இன்னும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் சுமார் 5 லட்சம் துருப்புகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எல்லைகளில் தீவிரவாத தாக்குதல்களுக்கான எச்சரிக்கைகளும் நிலவுகிறது.
ஆக இது இப்போதைக்கு சாத்தியமோ இல்லையோ ஆனால் ராணுவத்தை இயந்திரமயமாக்குவது நாட்டுக்கு நன்மை பயக்கும் தானே.