காவல் துறையில் 90 சதவிகிதம் பேர் ஊழல்வாதிகளே! 638 காவல் நிலையங்களில் தொலைபேசியே இல்லை!

காவல் துறையில் 90 சதவிகிதம் பேர் ஊழல்வாதிகளே! 638 காவல் நிலையங்களில் தொலைபேசியே இல்லை!

 ம.பா.கெஜராஜ்,

  காவல் துறையில் 10 சதவீதப் படை மட்டுமே திறமையானவர்கள் மீதி 90 சதவிகிதம் ஊழல்வாதிகளாவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.

  ஊழல் அதிகாரிகளைக் களைந்து, திறைமையற்ற அதிலாகரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டிய சரியான தருணம் இது. என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீத காவல்துறை அதிகாரிகளை ஊழல்வாதிகள் மற்றும் திறமையற்றவர்கள் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், 10 சதவீத காவலர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்று கூறியுள்ளது.

  மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.பாக்யலட்சுமிக்கு எதிராக, நாமக்கல் பெண் ஒருவர் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை, நீதிபதி பி.வேல்முருகன் சமீபத்தில் முடித்து வைத்தார்.

 10 சதவீத அதிகாரிகளால் மட்டும் அனைத்து விசாரணைகளையும் செய்ய முடியாது. எனவே, அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவே சரியான தருணம் என்றார் நீதிபதி. ஊழல் செய்யாத, ஆனால் விசாரணைகளை மேற்கொள்ளத் தகுதியற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

  நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக இன்ஸ்பெக்டரை தண்டிக்கக் கோரியும், போலி சொத்து ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக இருவர் மீதான தனது புகாரை புதிதாக விசாரிக்க உத்தரவிடக் கோரியும் எஸ்.வசந்தி என்பவர் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

 இருப்பினும், இன்ஸ்பெக்டரின் நடவடிக்கை, சிறந்த விசாரணைகளை நடத்த முடியாத அவரது இயலாமையை காட்டுகிறது என்று நீதிபதி வேல்முருகன் கூறினார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்து போலிசாரை.....?

 அதே போல் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையில் 257 காவல் நீலையங்களுக்கு வாகனங்கள் இல்லை என்றும், 638 காவல் நிலையங்களில் தொலை பேசியே இல்லை என்று கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.