பொது இடத்தில் சந்திக்கலாமா! ஸ்டாலின் சவாலை ஏற்ற எடப்பாடி!

ஜெ.ஸ்ரீதர்
பொது இடத்தில் சந்திக்கலாமா என்ற ஸ்டாலின் சவாலுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஓ.கே.சொல்லியிருக்கிறார்.
முதலமைச்சர் அறிவிக்கும் பொதுவான இடத்தில் விவாதிக்க நானும், ஒ.பி.எஸ் அவர்களும் தயார் என்றூ அவர் சொல்லியிருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நீட் தேர்வு குறித்து ஸ்டாலினுடன் விவாதிக்க தயார். முதல்-அமைச்சர் அறிவிக்கும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்ய தயாராக நானும் ஓபிஎஸ்மவர்களும் ம் உள்ளோம். நீதிபதியாக இருந்து மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார்.
முன்னதாக நீர் தேர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவலை மக்கள் மத்தியில் வெளியிட்டு வருகிறார். அவர் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதலமைச்சர் சவால் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.