பாலாஜி மாவட்டமாக உதயமாகும் திருப்பதி! ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்!

பாலாஜி மாவட்டமாக உதயமாகும் திருப்பதி! ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்!

வித்யா,

திருப்பதிக்கு தனி மாவட்டம் இல்லாத நிலையில் தற்போது பாலாஜி மாவட்டம் என்று புதிய மாவட்டம் அங்கு தோற்றுவிக்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து 13 புதிய மாவட்டங்கள் உதயமாகிறது.

இது பற்றின விவரம் வருமாறு,  

  ஆந்திராவில் தற்போது சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் விசாகப்பட்டினம்,ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், கர்நூல், உட்பட பதிமூன்று மாவட்டங்கள் உள்ளன.

  இந்தமாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதால், மாவட்ட தலைநகரங்கள் அதிக தூரத்தில் உள்ளது, அவற்றை பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனர்.

  இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மேற்படி 13 மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் 13 மாவட்டங்களை பிரிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்டங்கள் பிரிப்பதற்கான வரைபடங்களை நேற்றுமுன்தினம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அதிகாரிகள் வழங்கினர்.

  அதன்படி புதிதாக பதிமூன்று மாவட்டங்கள் அடங்கிய ஆந்திரா இனி மொத்தம் இருபத்தி ஆறு மாவட்டங்களாக உயர்கிறது.

  இதில் குறிப்பாக சித்தூர் மாவட்டம் சித்தூர், திருப்பதி என 2-ஆக பிரிக்கப்பட்டு சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், திருப்பதியை தலைமையிடமாக கொண்டு பாலாஜி மாவட்டம் புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.

 புட்டபருத்தி சாயிபாபா ஆசிரமம் அம்ய்ந்துள்ள அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம், சத்திய சாயி எனவும், கடப்பா மாவட்டம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா அன்னமய்யா மாவட்டம் எனவும், நெல்லூர் மாவட்டம் நெல்லூர், பொட்டி ஸ்ரீராமுலு மாவட்டமாக பிரிக்கப்படுவதாக அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.