பாஜக அரசு மன்னர் ஆட்சியை போல் செயல்படுகிறது:-காங்கிரஸ்!

ஜி.கே.சேகரன்,
பாஜக அரசு மன்னர் ஆட்சியை போல் செயல்படுகிறது ஜனநாயக படுகொலையை செய்கிறது - காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பொன்னேரி துரை சந்திரசேகர் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பொன்னேரி துரை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பிரதமர் மோடி மன்னர் ஆட்சியை போல் செயல்படுகிறார், ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கிறார், ராகுல் காந்தி நாட்டு மக்களுக்காக பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பியதை பொறுக்க முடியாத மோடி ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்தார்.
இதனை காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பிரதமரின் நண்பரான அதானியும், அம்பானியும் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கீறார்கள், ஏழை மக்களுக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட நிதியை குறைத்துவிட்டார்கள் இதனால் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
நேற்று பிரதமரை தமிழக முதல்வர் வரவேற்றது ஜனநாயக முறைப்படி சரியாக நாட்டின் பிரதமருக்கு அரசியல் நாகரீகத்துடன் வரவேற்பளித்துள்ளார் என்று கூறினார்.