மீண்டும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பினர்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
வேலூர் மாவட்டம், வேலூர் கூர் நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பிய் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அங்கு சமூக நலத்துறை அமைசர் கீதா ஜீவன் அவர்கள் நேரில் ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் தற்போது நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனராம். அப்படியிருக்க இது குறித்து நெல்லை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் பீதியை உண்டாக்கியிருக்கிறது.