குட்கா போன்ற போதை புகையிலைக்கு மேலும் ஓராண்டு தடை!

ரா.மதன்,
குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை விற்கவோ தயாரிக்கவோ கூடாது என்று மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
போதை புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்து வருகிறது.
அதன்படி இந்த தடை கடந்த மே 23-ஆம் தேதி நிறைவடைந்தது. அப்படியிருக்க இந்த தடையை மேலும் ஒராண்டுக்கு நீடித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
ஆகவே தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், பாதுகாக்கவும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இதனால் ரைடு வேட்டை தொடரும்.