தாயை கொலை செய்து நாடகம் ஆடிய மகன் கைது!

கு.அசோக்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி சின்னதாய்(60) இருவரும் கூலி வேலை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது மூன்று மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
அப்படியிருக்க மூத்த மகன் வனராஜ் தனது மனைவி மகன்களுடன் ஈச்சம்பட்டு கிராமத்திலேயே வசித்து வருகிறார்.இந்த நிலையில் குடிபோதையில் இருந்த வனராஜ் நேற்று இரவு தாய் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சின்னத்தாயி வனராஜ் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சின்னதாயி சம்பவ இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்.
சின்னத்தாயியை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சின்ன தாயின் உடலை பெற்ற வனராஜ் தனது தாய் சின்னதாயி வயதுமூப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கிராம மக்களிடம் கூறி அவசர அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சொந்த ஊருக்கு வந்த இரண்டாவது மகன் வனகுமார் தாய் சாவில் சந்தேகம் உள்ளதாக உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னதாயின் உடலை கைப்பற்றி மூத்த மகன் வனராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.