கலெக்டரின் அதிரடி!

பி.ஜி.ஆர்.,
முதியோர்கள் வேலூர் கலெக்டரிடம் அளிக்கும் பெட்டிஷன்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இன்று (06/04/2022) குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை, குடியாத்தம் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
மரச்செடிகளை நட்டு வைத்த அவர், முதியோர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு துறைசார்ந்த அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார்.
அப்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.தனஞ்ஜெயன் குடியாத்தம் வட்டாட்சியர் திருமதி.லலிதா ஆகியோர் உடனிருந்தனர்.