ஜூனியர் வழக்கறிஞர் தற்கொலை:- இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு எதிரொலி!!

ம.பா.கெஜராஜ்,
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்குகில் தொடர்புடையவர் மோகன்ராஜ். அவருடைய ஜூனியராக இருந்தவர் வழக்கறிஞர் கோபிநாத், இவர் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் இன்று தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்.
இது பற்றின விவரம் வருமாறு.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்து, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
ஆகவே இரட்டை இலை சின்னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் சசிகலா அணியினரும் முயற்சி செய்து வந்தனர்.
அப்படியிருக்க இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த லஞ்சம் பரிமாற்றத்துக்கு இடைத்தரகராக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் செயல்பட்டார் என்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி போலீசார் கைது அவரை செய்தனர்.
இந்த ஏற்பாடை டி.டி.வி.தினகரன் தான் செய்தார் என்று கருதிய டெல்லி போலீசார் அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவரது உதவியாளர் மல்லிகார் ஜுனாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலைரானார்கள்.
இவ்வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திதது. இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை தற்போது மீண்டும் கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர் பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்படியிருக்க இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கும் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மனில் கூறியுள்ளனர்.
நாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த கோபிநாத் என்பவர் திடீரென்று இன்று தற்கொலை செய்துக் கொண்டார்.
தற்கொலை செய்துக் கொண்ட வழக்கறிஞர் கோபிநாத், ராமநாதபுரம் சீனியர் வழக்கறிஞர் மோகன்ராஜின் ஜூனியர் ஆவார்.
மேற்கண்ட வழக்கில் மோகன்ராஜ் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அவரது ஜூனியர் கோபிநாத்தை விசாரிப்பதற்காக அமலாக்கதுறை முடிவெடுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த வழக்கு இடையே கிடப்பில் இருந்த போதிலும் தற்போது புதிய பரிமாணத்துடன் வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் இதில் எதிர்பாராத பரபரப்புகளும், திருப்பங்களும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.