குடவாசல் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்!

குடவாசல் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்!

G.Balaguru,

குடவாசல் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திங்கள்கிழமை காலை பேரூராட்சி அலுவலகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டம் நடைபெற்றது.

குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவனைக்கு செல்லும் அத்திக்கடை சாலையை புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும், தீயணைப்பு நிலையம் உள்ள பாதையில் தீயணைப்பு வாகன செல்ல இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி   சாலை அகலப்படுத்தி புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும்,

அகர ஒகையில் இருந்து பள்ளிவாசல் வரையில் சாலை ஓரங்களில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளை அப்புறப்படுத்தி  பேரூராட்சிக்கு உரிய இறைச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல உடன் நடைவடிக்கை வேண்டும், 

20 ஆண்டுகளுக்கு முன்பாக பேரூராட்சி சார்ந்த பஞ்சநதி குளம் என்ற இடத்தில் தமிழக அரசு 100 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்பட்டு அங்கே குடியிருக்கும் மக்களுக்கு இதுநாள் வரை எந்தவித அடிப்படை வசதியின்றி குடியிருந்து  வருகின்றனர்,

 தற்போது பெய்த தொடர் மழையில்  குளம்போல் தேங்கி உள்ள நீரை அகற்றி அங்கே வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி அனைத்தும் செய்து தர வேண்டும், குடவாசல் பேரூராட்சி பகுதி முழுவதும் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை முறையாக பராமரித்து குற்றச் செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு கேமரா 24 மணி நேரமும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு குடவாசல் தெற்கு பகுதி குழு ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினார்.

மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா,தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர், வலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கே.பகத்சிங், மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கே.ஜெகதீஸ்வரி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.ஏ.சரவணன்,எஸ்.கிருஷ்வநாதன்,வீ.கருணானந்தம்,எம்,கோபிநாத் உள்ளிட்ட  ஏராளமான தோழர்கள்,பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிறைவாக குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா, நன்னிலம் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாளையிலிருந்து  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை உயர் அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் உறுதியளித்தார். உறுதியளிப்பு ஏற்றுக்கொண்டு ஒரு மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் நிறைவு பெற்றது.