சந்திரபாபு நாயுடுவிடம் எகிறிய டிஎஸ்பி!! போலிஸ் தடுப்பை மீறி கூட்டம்!!

வி.டி.வித்யாசாகர்,

  ஆந்திரா முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று அவருடைய சொந்த தொகுதியான குப்பத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வந்தார். அவரை தெலுங்கு தேச கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். ஆனால் அந்த உற்சாகம் சற்று நேரத்தில் போலிசாருடன் மோதலாக மாறியது.

 இது பற்றின விவரம் வருமாறு,

  சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ளும்  கூட்டம் இன்று நடக்க இருந்த வேளையில், நேற்று நள்ளிரவில் ஆந்திரா அரசு திடீரென்று ஒரு அரசாணை வெளியிட்டது.

 அதில் பொதுவெளியில் எங்கும் கூட்டம் நடத்த தடை என்று விதித்துள்ளது.

 இதை மையப்படுத்தி குப்பம் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி சந்திரபாபு நாயுடுவை தடுத்தார்.  இதனால் இரு தரப்புக்கும் சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

   அப்போது சந்திரபாபு நாயுடு டிஎஸ்பி யிடம் தெரிவிக்கையில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சீக்கிரம் வீட்டுக்கு போகும் அப்போது இந்த டிஎஸ்பியும் வீட்டுக்கு போவார்.

   நான் ஏழு தடவை இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன் என்னையே இங்கு கூட்டம் நடத்தக்கூடாது என்று சொல்வதற்கு நீ யார் என்று கேட்டு கேட்டார்.

    அதற்கு டிஎஸ்பி தெனாவட்டாக பதில் சொல்லவே தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஆவேசப்பட்டு தள்ளுமுள்ளு இறங்கினர்.  போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஏகப்பட்ட போலிசார் அடிவாங்கிக்கொண்டு ஓடினார்கள்.

   இதனால் ஆந்திராவில் பரபரப்பு நிலவுகிறது.

இது குறித்து சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில் பத்திரிகைகளுக்கு எந்த உரிமையும் இல்லை ஆனால் சாட்சி தொலைக்காட்சிக்கும் சாட்சி பத்திரிகைக்கும் முன்னுரிமை கொடுத்து இங்கு நடப்பவர்களை எடுக்க அனுமதித்துள்ளார்கள் அதிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டி அரசு இலட்சணம் தெரியும்.

  இந்த ஜனநாயக நாட்டில் என்னை பேசக்கூடாது என்று தடுப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டிக்கு தகுதியில்லை. ஜெகன் மோகன் அறிவித்தது சட்டத்துக்கு புறம்பானது ஆகும், அவர் வீட்டுக்கு செல்லும் நேரம் நெருங்கிவிட்டது என்று காட்டமாக சொன்னவர் கூட்டத்தை நடத்திக்காட்டினார்.