பதவி என்பது ஷோகேஸ் பொம்மை மாதிரி:-சொன்னார் அமைச்சர் காந்தி!
கு.அசோக்,
ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி அரசியலில் திமுகவில் பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருக்கக்கூடியவர்கள் ஷோகேஸ் பொருட்கள் போன்றவர்கள் எனவும் தொண்டர்கள் கட்டிட அடித்தளம் போன்றவர்கள் என்று பேசினார்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இராணிப்பேட்டை மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்ச்சியின் பேசிய தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தெரிவிக்கையில் தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கினால் அவர்கள் சந்தோஷப்பட மாட்டார்கள் அது அவர்களுக்கு கொஞ்ச நேரம் மட்டுமே சந்தோஷத்தை கொடுக்கும் எனவும் அதுவே தொண்டர்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் கடைசி வரையிலும் அவர்கள் உண்மையாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் தொண்டர்கள் இல்லையென்றால் பதவிகளிலும் பொறுப்புகளிலும் யாரும் இருக்க முடியாது எனவும் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருக்கக்கூடியவர்கள் சோகேஸ் பொருட்கள் போன்றவர்கள் எனவும் தொண்டர்கள் கட்டிடத்தின் அடித்தளம் போன்றவர்கள் எனவும் தொண்டர்கள் இல்லை என்றால் யாரும் கிடையாது என பேசினார்.